close
Choose your channels

நிவாரண உதவியாக ரூ.1 கோடி உதவித்தொகை கொடுத்த '2.0' பட நடிகர்

Tuesday, October 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீகார் மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தலைநகர் பாட்னாவில் ஒரு வாரம் விடாமல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டதாகவும், பாட்னாவில் மட்டும் பல்லாயிரம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும் ரஜினியின் ‘2.0’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான அக்சய்குமார், பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.1 கோடி அளித்துள்ளார்.

இந்த ஒரு கோடி ரூபாய் பணம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் என பிரித்து கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அக்சயகுமாரின் இந்த உதவிக்கு பீகார் மக்கள் தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.