close
Choose your channels

'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' முதல் நாள் சாதனையை '2.0 முறியடிக்குமா?

Wednesday, November 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' சாதனை புரிந்துள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த சாதனையை நாளை வெளியாகவுள்ள ரஜினியின் '2.0' முறியடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருவிழா நாளில் '2.0' படம் வெளியாகவில்லை என்றாலும் ரஜினி படம் வெளியாகும் நாளே திருவிழா என்பதால் இந்த படத்தின் முதல் நாள் வசூல் பிரமாண்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.50 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது

புக் மை ஷோ இணையதளத்தில் மட்டுமே இந்த படத்திற்காக 1 மில்லியன் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை எந்தவொரு படமும் செய்யாத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகளுக்கும் ஆனது என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த படம், இதுவரை உலக அளவில் யாரும் தொடாத செல்போனினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கதையை அலசியுள்ளது. எனவே இந்த படத்தின் கதை ரசிகர்களை கவர்ந்துவிட்டால் நிச்சயம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்ய வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.