close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் விபத்து: ஒருவர் மரணம் அடைந்ததால் பரபரப்பு

Saturday, September 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 80 நாட்களுக்கும் மேல் நடந்து வரும் நிலையில் இன்று ஏசி மெக்கானிக் ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே தனியார் பிலிம் சிட்டி ஒன்றில் பிக்பாஸ் வீட்டின் செட் போடப்பட்டு அதில் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வீட்டின் ஏசி மெக்கானிக் குணசேகரன் என்பவர் நேற்றிரவு திடீரென இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மரணம் அடைந்த ஏசி மெக்கானிக் குணசேகரனுக்கு வயது 30 என்றும், அவர் அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்து தங்கியிருந்து ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.