close
Choose your channels

புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த ரசிகர்!

Saturday, October 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று மாரடைப்பால் திடீரென காலமான செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் ஒட்டுமொத்த திரையுலகினரும் நேற்று தங்களது அதிர்ச்சியை சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகினர் போலவே கர்நாடகா உள்பட தென்னிந்தியாவில் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று புனித் ராஜ்குமார் அவர்களின் மரணச் செய்தி கேட்டதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிந்தார்கள் என்பதும் அவர்களது அழுகை சத்தம் பெரும் ஓலமாக கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்களூரில் நேற்று புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவு செய்தியைக் கேட்டு ரசிகர் ஒருவர் திடீரென அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். இதனை அடுத்து அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. புனித் ராஜ்குமாரின் வெறித்தனமான ரசிகரான அவர் புனித்தின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.