close
Choose your channels

ரூ.7 கோடி முறைகேடு குற்றச்சாட்டுக்கு விஷால் பதில்

Friday, May 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளார்களின் கேள்விக்கு விஷால் பதிலளித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பாரதிராஜா, டி.ராஜேந்தர் உள்பட ஒருசிலர் நடத்திய கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், விஷால் லைக்காவுடன் கூட்டு வைத்திருப்பதாகவும், ஒரு வருடம் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகளை விஷால் காப்பாற்றவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விஷால், 'தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரூ.7 கோடி முறை கேடு நடந்ததாக சிலர் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரம் இருக்கிறதா? புகார் கூறுபவர்கள் வெளியே கூட்டம் போட்டு பேசுவதை நிறுத்திவிட்டு சங்கத்துக்கு வந்து ஆதாரத்தைக் காட்டி விளக்கம் கேட்கலாம். அதை விட்டுவிட்டு, வெளியே இருந்துகொண்டு முறைகேடு, லைகா நிறுவனத்துடன் கூட்டு என்று தனியாக நின்றுகொண்டு பேசுவதில் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

மேலும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் திறக்கப்படும் என்றும் அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பு புதிய கட்டிடத்தில் நடக்கும் என்றும் விஷால் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.