close
Choose your channels

'மாரி 2' சாய்பல்லவியின் தரலோக்கல் கேரக்டர் இதுதான்

Thursday, November 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பிரேமம்' படத்தின் மலர் டீச்சர் கேரக்டர் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்ற சாய்பல்லவி, தற்போது தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சாய்பல்லவி தரலோக்கல் கேரக்டரில் நடித்துள்ளதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையீல் தற்போது அந்த கேரக்டரின் பெயரை அறிவித்துள்ளனர்.

'மாரி 2' படத்தில் சாய்பல்லவி 'ஆராத்து ஆனந்தி' என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சாய்பல்லவி ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் ஆட்டோ ஓட்டுபவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.