close
Choose your channels

நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நடிகை மீனா உள்பட ஒரு சிலருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தான் மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அருண்விஜய் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில் அருண் விஜய் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.