close
Choose your channels

'மீ டூ' விவகாரம்: விஷால் அறிவித்த அதிரடி முடிவு

Sunday, October 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி 'மீ டூ' ஹேஷ்டேக்கில் கூறிய பாலியல் புகார்கள் திரையுலகை மட்டுமின்றி தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரையுலகினர் ஒவ்வொருவராக சின்மயிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை வடபழனியில் நடைபெற்ற 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறுகையில், 'திரையுலகில் மீ டூ' விவகாரம் குறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அதிரடியாக தெரிவித்தார். மேலும் அமலாபால் அவர்களுக்கு பாலியல் தொல்லை நடந்த விவகாரத்தின்போது உடனடியாக சங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுத்ததாகவும், அதேபோல் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக சொன்னால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷால் தெரிவித்தார்.

அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய குற்றச்சாட்டை நிரூபித்தால் மட்டுமே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷால் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.