close
Choose your channels

இளையராஜா ஓவியத்தை வைத்து போட்டோஷூட்: நடிகை கஸ்தூரியின் நெகிழ்ச்சியான பதிவு!

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றது என்பதும் சக ஓவிய கலைஞர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்கள் அவருடைய ஓவியத்திற்கு ரசிகர்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஓவியர் இளையராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல திரையுலக பிரபலங்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் என்பதைப் பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் இளையராஜா குறித்த பதிவு ஒன்றை செய்துள்ளார். இளையராஜாவின் ஓவியங்களை வைத்து சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் எடுத்ததாகவும் அந்த போட்டோ ஷூட் தன்னால் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது என்றும் ஆனால் அந்த போட்டோஷூட் புகைப்படங்களையே அவருக்கு அஞ்சலியாக சமர்ப்பிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நான் ஒரு இளையராஜா விசிறி என்பது எல்லோரும் அறிந்ததே. போன வருடம், அதில் ஒரு முன்னேற்றம். ஒரு இளையராஜா இல்லை, இரு இளையராஜா விசிறி. ஓவியர் இளையராஜாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர் புகைப்பட நிபுணர் மனோ. அவரின் அழகு ததும்பும் சித்திரங்களை ஒரு தீம் ஆக வைத்து ஒரு போட்டோஷூட் செய்தோம். அதை அவருக்கே அஞ்சலியாக சமர்ப்பிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இளையராஜா மறைந்துவிட்டார் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.