close
Choose your channels

ஜனவரி முதல் நாங்கள் நால்வர்: 2வது குழந்தை அறிவிப்பை வெளியிட்ட நடிகை!

Monday, September 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

கமல்ஹாசன் நடித்த ’தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் இதயத்திருடன், திமிரு, மொழி, ராஜாதி ராஜா உள்பட பல திரைப்படங்களிலும், மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி.

இவர் கடந்த 2008ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நீலிமாராணி தனது திருமண நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்து தற்போது தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் 20 வாரங்கள் ஆகிவிட்டது என்றும் வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்றும் ஜனவரியில் நாங்கள் நால்வராவோம் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.