close
Choose your channels

ரஜினியின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தது இந்த நடிகையின் மகளா?

Saturday, June 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்தபோது பிரபல நடிகை ஒருவரின் மகள் தான் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததாக அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2002ஆம் ஆண்டு தமிழ் திரையுலகினர் கர்நாடக மாநிலம் காவிரி தண்ணீரை திறந்துவிட மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது மணி நேரம் நடந்த இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தபோது ஒரு சிறு குழந்தை ரஜினிக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது. அந்தக் குழந்தைதான் நடிகை ரேகாவின் குழந்தை என்பது தற்போது தெரியவந்துள்ளது

பாரதிராஜாவின் ‘கடலோர கவிதைகள்’ படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல திரைப்படங்களில் நடித்த நடிகை ரேகா, ‘குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 4 ஆகியவற்றில் கலந்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை ரேகா, ’இந்த புகைப்படம் தனக்கு மலரும் நினைவுகளை ஏற்படுத்திவிட்டது, தனது குழந்தை ரஜினியால் ஆசிர்வதிக்கப்பட்டார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.