close
Choose your channels

வாயை ஜிப் போட்டு மூடுங்கள்: முன்னாள் அமைச்சரை ஜெயிலுக்கு அனுப்பிய நடிகையின் பதிவு!

Friday, July 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் அமைச்சரை சிறைக்கு அனுப்பிய நடிகை ஒருவர் தன்னைப் பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவு செய்த நெட்டிசன்களை பார்த்து வாயை ஜிப் வைத்து மூடிக் கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஒருவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததை அடுத்து மணிகண்டன் கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அந்த நடிகை தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவு செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் என்னை பற்றி தவறாக கமெண்ட் செய்பவர்களுக்கு ஒரு வார்த்தை, நீங்களா என்னுடைய செலவுகளை பார்த்துக் கொள்கிறீர்கள்? எனவே வாயை வைத்து மூடிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன் ஒருவர் முன்னாள் அமைச்சரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் ஜாலியாக இருக்கிறீர்கள் என்று பதிவு செய்ததற்கு ’நான் அப்படி இருப்பதற்கு தகுதியானவர் தான், உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனக்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.