close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தை அடுத்து லைகா-த்ரிஷா இணையும் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, December 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்புகளில் ஒன்றான மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் குந்தவை என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் லைகா நிறுவனத்தில் த்ரிஷா நடித்த மற்றொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ராங்கி’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படம் இம்மாதம் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவித்ததோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் த்ரிஷாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கதையில் உருவான இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதையம்சம் கொண்டது என இன்று வெளியாகியுள்ள வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. பிரபல மலையாள நடிகர் அனஸ்வர ராஜன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ’எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos