close
Choose your channels

கணவர், குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கொண்டாடிய அஜித்-விஜய் பட நாயகி!

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’ராசி’ விஜய் நடித்த ’நினைத்தேன் வந்தாய்’ ’மின்சார கண்ணா’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்பா சமீபத்தில் தனது 45வது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தமிழில் ’உழவன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமான ரம்பா, இரண்டாவது படமான ’உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதன்பின்னர் செங்கோட்டை, சுந்தரபுருஷன், சிவசக்தி, ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், அருணாச்சலம், மின்சார கண்ணா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். நடிகை ரம்பா கடைசியாக 2010ஆம் ஆண்டு கலைஞர் மு கருணாநிதி கதை வசனம் எழுதிய ’பெண்சிங்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தநிலையில் நடிகை ரம்பா இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்குப் பின்னர் அவர் கனடாவில் செட்டில் ஆனார் என்பதும் இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரம்பாவின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.