close
Choose your channels

ஆணவத்துல ஆடாதிங்கடா: திரையுலக பிரபலத்திற்கு அனிதா சம்பத் கணவர் பதிலடி!

Sunday, October 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத்தின் சோகக்கதையை கிண்டல் செய்த திரையுலக பிரபலத்திற்கு அனிதா சம்பத்தின் கணவர் பதிலடி கொடுத்துள்ளதற்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘கடந்து வந்த பாதை’ என்ற சொந்த கதை சோகக்கதை சொல்லும் டாஸ்க் கடந்த வாரம் நடந்தது. போட்டியாளர்கள் அனைவரும் முடிந்தவரை தாங்கள் கடந்து வந்த பாதையை உருக்கத்தோடு கூறினர்.

இந்த நிலையில் இவற்றில் அனிதா சம்பத் கூறிய கதையை கேட்ட டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தனது டுவிட்டரில், ‘அனிதா கதையில் சோகம் ஒன்றும் இல்லை என்றும், ரொம்ப வேகமாக அனிதா பேசுகிறார் என்றும், இப்படி மூச்சுவிடாம பேசினா எல்லாரும் ஓடிடுவாங்க என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராமில் ‘ஏண்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசியை தெரிய வாய்ப்பு இல்லை. இப்படித்தான் அடுத்தவன் அனுபவிச்ச பசியையும் வலியும் கூட கிண்டல் பண்ண தோணும். டான்ஸ் மாஸ்டர்ன்னா டான்ஸ் ஆடலாம், ஆணவத்துல ஆடாதிங்கடா’ என்று கூறியுள்ளார்.

அனிதா சம்பத்தின் கணவரின் இந்த பதிலடிக்கு பதில் அளித்த சதீஷ், ‘சோகமான கதையை மத்தவன்கிட்ட சொன்னா, சோகமாத்தான் இருக்கும்ன்னு நினைச்சா என்னத்த சொல்றது? இது சோகமான கதை நம்புங்கன்னு கணவனும் கெஞ்சினா என்ன சொல்ல? உங்க ஆட்டம் என்ன ஆட்டம்ன்னு தெரியலை. அவங்க உள்ள அழுவுறதுக்கும், நீங்க வெளிய அழுவுறதும், எப்பா சாமி, பிபி டேப்ளட் வாங்கி வச்சிக்கோங்க’ என்று கூறியுள்ளார். இருவரது பதிவுகளும் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.