close
Choose your channels

அடுத்தடுத்து இசைவிருந்து தரவுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் - அனிருத்

Friday, May 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளம் இசைப்புயல் அனிருத் ஆகியோர் இசையமைத்த படங்களின் பாடல்கள் வெளியீடு அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் பாடல்கள் பணி முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் 'ஷோக்காலி' பாடல் டீசர் ரிலீஸ் ஆன நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு பாடலின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீடு இம்மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் பாடல்கள் பணியும் முற்றிலும் முடிந்துவிட்டது. இந்த படத்தின் பாடல்களை வரும் 15ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ராக்ஸ்டார் மற்றும் இசைப்புயல் ஆகியோர் இசையமைத்த பாடல்கள் வெளியாகவுள்ளதால் இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு செம இசை விருந்து காத்திருக்கின்றது என்பது உறுதியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.