close
Choose your channels

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் 100வது படத்தில் ஆஸ்கார் நாயகன்?

Friday, July 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின் 100வது படம் பாகுபலி', '2.0' படங்களுக்கு இணையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாகவும், இந்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் நாயகன், நாயகி தேர்வு உள்பட மற்ற நடிகர்களின் தேர்வை சுந்தர் சி தனது குழுவினர்களுடன் நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்ப்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.