close
Choose your channels

அருண்விஜய் அளவுக்கு வளர்ந்திருக்கும் அவர் வளர்த்து வரும் நாய்: ஆச்சரிய புகைப்படம்!

Sunday, February 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து கொண்டிருந்தாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜித்துடன் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படம் தான் நடிகர் அருண் விஜய்க்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் ’குற்றம் 23’ ‘’செக்க சிவந்த வானம்’, தடம்’, உள்பட தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்த அருண் ’அக்னி சிறகுகள்’ ’பாக்ஸர்’ மற்றும் ’சினம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் அருண் விஜய் சற்று முன்னர் தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் நீண்ட படப்பிடிப்பிற்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் தன்னுடைய நாய் ருத்ரா அவரை மிகுந்த அன்புடன் வரவேற்றதாகவும், அதன் அளவில்லா அன்பு தன்னை நெகிழ செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அருண்விஜய் வளர்ந்து வரும் ’ருத்ரா’ என்ற நாய் அவரை கட்டிப்பிடித்து இருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது அவருடைய உயரத்துக்கு அந்த நாய் கிட்டத்தட்ட வளர்ந்து உள்ளதும் தெரிய வருகிறது. இந்த இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அருண் விஜய் விரைவில் இயக்குனர் ஹரி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ப்ரியா பவானிசங்கர் நாயகியாக நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.