close
Choose your channels

அந்த கூட்டத்தில் நான் இல்லை: சர்கார் விவகாரத்திற்கு பின் சாந்தனு டுவீட்

Tuesday, October 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'சர்கார்' திரைக்கதையும் வருண் ராஜேந்திரன் பத்து வருடங்களுக்கு முன் எழுதிய செங்கோல் சிறுகதையும் ஒன்றே என்று எழுத்தாளர் சங்கத்தலைவர் பாக்யராஜ் கூறியபின்னர்தான் இந்த விவகாரம் பரபரப்பானது. எனது மகன் சாந்தனு, விஜய் ரசிகராக இருந்தபோதிலும் தலைவர் என்ற பதவிக்கு மதிப்பு கொடுத்து நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தற்போது இருதரப்பினர்களும் சமரசம் ஆனது தனக்கு மகிழ்ச்சியே என்றும் பாக்யராஜ் கூறியுள்ளார்.

இருப்பினும் ஒருசிலர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர். எனவே இனிமேல் சாந்தனு, விஜய் ரசிகராக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால் இதற்கு விளக்கம் அளித்துள்ள சாந்தனு, 'சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” என்றும், என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்! என்றும் கூறியுள்ளார். மேலும் சர்கார் கதையை தனது தந்தை வெளிப்படுத்தியதற்கு வருத்தமும் தெரிவித்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.