close
Choose your channels

'பாரதி கண்ணம்மா' ரோஷினிக்கு மனநிலை மாறியதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Monday, January 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் ’பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வரும் ரோஷினிக்கு திடீரென மனநிலை மாறியதாக பரவி வரும் வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரோஷினிக்கு இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு விரட்டப்பட்டார் என்பதும் அவர் சாலை சாலையாக சுற்றும் காட்சியை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த மீம்ஸ்கள் அந்த தொடரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்து, குழந்தையைக் காப்பாற்றுவதற்காக போராடுது போல் ரோஷினி நடித்து வருவது இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் ரோஷினி ‘கண்ணம்மா’ கேரக்டரிலேயே ஒன்றிவிட்டதால், சூட்டிங் இல்லாத நேரத்திலும் ’எனது குழந்தை எங்கே’ என்று ரோஷினி கேட்க தொடங்கி விட்டதாகவும், அதனால் அவர் மனநல மருத்துவமனையில் கவுன்சிலிங் பெற்றதாகவும் ஒரு சிலர் வேண்டுமென்றே வதந்தியை கிளப்பி உள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்த ரோஷினி தான் நலமுடன் இருப்பதாகவும் தன்னைப்பற்றி வேண்டுமென்றே சிலர் பரப்பிய வதந்தியை நம்ப வேண்டாம் என்றும், அது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.