close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாமர்த்தியமாக வாக்கு சேகரிக்கும் கமல்

Saturday, September 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் மூன்று வாரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என்பதால் பார்வையாளர்கள் மத்தியிலும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் கமல்ஹாசன் பேசியபோது, 'நினைச்சதெல்லாம் நடக்கணும்னா அதுக்காக வேலை செய்யணும், களத்துல இறங்கணும், சும்மா வாய்ச்சொல்லி வீரராக இருந்தால் போதாது. டுவிட்டரில் மட்டும் பொங்கினால் போதுமா? களத்தில் இறங்கி ஓட்டு போடணும், ஓட்டு வாங்க வேண்டியவர்கள் ஓட்டு வாங்கிவிட்டால் பதறுகிறவர்கள் பதறுவார்கள், அதை விட்டுவிட்டு குத்துது, குடையுது, வலிக்குதுன்னு புலம்பிகிட்டு இருந்தா யார் பொறுப்பு' என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

கமல்ஹாசனின் இந்த கருத்து மும்தாஜுக்கு மறைமுகமாக கூறுவது போல் தெரிந்தாலும் சாமர்த்தியமாக அவர் தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் முயற்சியாகவும் கையாண்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். இன்றைய நிகழ்ச்சியில் இன்னும் மறைமுகமாக அரசியல் பேசுகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.