close
Choose your channels

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார்?

Saturday, July 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் வனிதா, மீராமிதுன், மதுமிதா, சரவணன், மோகன் வைத்யா என ஐந்து பேர் உள்ளனர்.

பார்வையாளர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்த வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருந்தாலும் மக்கள் போடும் வாக்குகளின் அடிப்படையில் மட்டுமின்றி பிக்பாஸ் மனது வைத்தால் மட்டுமே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் ஏற்கனவே வனிதாவை காப்பாற்றும் நடவடிக்கைகளை டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் எடுத்துவிட்டதால் இந்த வாரம் வனிதா சேஃப் ஆகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்யா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக நமக்கு கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இன்னும் சில நிமிடங்களில் இந்த தகவல் உறுதிபடுத்தப்படும் என தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலில் சீனியர்களை வெளியேற்றிவிட்டு அதன்பின் இளம் போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டியை உண்டாக்குவதே பிக்பாஸின் திட்டமாக தெரிகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஃபாத்திமா பாபு, இந்த வாரம் மோகன் வைத்யாவை அடுத்து சரவணன், சேரன் ஆகிய இருவரும் அடுத்த இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.