close
Choose your channels

ரொம்ப ஆட்றாங்க, என்னால சும்மா இருக்க முடியாது: வனிதா ஆவேசம்

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேசன் படலம் நடக்கும் என்பது தெரிந்ததே. கடந்த மூன்று வாரங்களாக நாமினேஷனில் இருந்து தப்பி வந்த வனிதாவை, இந்த வாரம் 'வி ஆர் பாய்ஸ்' வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்த்ததே. அதேபோல் இன்றைய நாமினேஷன் படலத்தில் தர்ஷன், முகின், சாண்டி உள்பட கவின் குழுவினர் வனிதாவை நாமினேஷன் செய்கின்றனர்.

இந்த நிலையில் வனிதா, தர்ஷனை நாமினேஷன் செய்கிறார். ஐந்து பேர் ஒரு குழுவாக சேர்ந்து அவர்களுக்குள் நாமினேட் செய்யாமல் உள்ளனர். குறிப்பாக அந்த 5 பேர்களில் ஒருவர் கூட தர்ஷனை நாமினேட் செய்வதில்லை. எனவே இனிவரும் வாரங்களில் தர்ஷன் நாமினேட் பட்டியலிலேயே வருவாரா? என்ற சந்தேகம் தனக்கு வந்திருப்பதாக தர்ஷனை நாமினேஷன் செய்ததற்கான காரணத்தை தெரிவித்தார்.

மேலும் அந்த ஐந்து பேர்களும் ரொம்ப ஆடுறங்க என்றும், கண்ணுக்கு தெரிந்து தன்னால் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் கூறினார். என்னதான் தர்ஷனை வனிதா நாமினேஷன் செய்தாலும், எவிக்சன் பட்டியலில் தர்ஷன் வந்தாலும் அவரை மக்கள் மிக எளிதில் காப்பாற்றிவிடுவார்கள். எனவே இந்த வாரம் வனிதாவுக்கு ஆப்பு வைக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்றே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.