close
Choose your channels

சுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா?

Saturday, October 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் -சனம் ஷெட்டி விவகாரம் குறித்து கமல்ஹாசன் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே முதலாவது புரமோவில் செங்கோலை கையில் எடுத்து இதை கையில் எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று கமல் கூறியதைப் பார்த்தோம்

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் அவர் சுரேஷ், சனம் செட்டி குறித்த விஷயத்தை தான் பேசி இருக்கிறார். எல்லாருக்குமே தெரியும் நான் எந்த விஷயத்தைப் பற்றி பேசப்போகிறேன் என்று என்று கூறிய கமல், வன்முறை தவறுதான் என்று கூறி, சனம்ஷெட்டி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கூறுபவர்கள் யார் யார்? என்று கேட்கிறார்.

இதற்கு ஆஜித், கேப்ரில்லா, ரியோ தவிர மீதியுள்ள அனைவரும் கையை தூக்கி உள்ளனர். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் சனம்ஷெட்டி பக்கம் நியாயம் இருக்கின்றது என சுரேஷே கையை தூக்கி உள்ளார் என்பது தான். இதனையடுத்து வயதுக்காக மரியாதை கொடுக்க பார்க்கிறோம் என்ற இங்கிததத்தை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று கமல் கூறியுள்ளது சுரேஷுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது

மொத்தத்தில் இன்று கமலஹாசன் பேசுவதைப் பார்த்தால் எவிக்சன் பட்டியல் இருக்கும் சுரேஷ், ஒருவேளை இந்த வாரம் வெளியேற்றப்படுவாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.