close
Choose your channels

'வல்லவனுக்கு வல்லவன்' ஆக மாறும் 'அசால்ட் சேது'?

Monday, September 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிகர்தண்டா' படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹா, தற்போது அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜின் இறைவி, பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக், மசாலா படம், உறுமீன், கவலை வேண்டாம், பாம்புச்சட்டை ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் பாபிசிம்ஹா, தற்போது மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாபிசிம்ஹா நடிக்கும் புதிய படத்திற்கு 'வல்லவனுக்கு வல்லவன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கடந்த 1965ஆம் ஆண்டு ஜெமினிகணேசன், மனோகர் நடித்த படம் ஒன்று வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பாபிசிம்ஹா நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் 'அசால்ட் புரடொக்ஷன்ஸ்' என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பாபிசிம்ஹா நடித்த 'ஜிகர்தண்டா' படத்தில் அவருடைய கேரக்டரின் பெயர் 'அசால்ட் சேது' என்பதும் அனைவரும் அறிந்ததே. தனக்கு தேசிய விருது பெற்று தந்த கேரக்டருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அதே பெயரில் புரடொக்ஷன் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக ஷிவதா நாயர் மற்றும் பூஜா தேவரியா ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.