close
Choose your channels

விஜய்யின் நீலக்கண் ரகசியம். இதுவரை வெளிவராத 'புலி' தகவல்

Monday, September 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் புலி' படம் குறித்த புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை வெளிவராத தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் விஜய் ஒரு சில காட்சிகளில் நீலக்கண்களில் தோன்றும்படி வருகிறார். இந்த கேரக்டர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி, விஜய் தன் நீலக்கண்களின் உதவியால் விலங்குகளின் பாஷைகளில் பேசுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது மட்டுமின்றி தமிழ் சினிமாவிற்கே இந்த கான்செப்ட் மிகவும் வித்தியாசமானது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே 'புலி' படத்தின் இரண்டாவது டிரைலரில் ராட்சத ஆமை ஒன்றிடம் விஜய் 'அய்யா' என்று பேசுவதை பார்த்தோம். இதேபோல் பல விலங்குகளிடம் அவர் பேசுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் மூன்று நாட்களில் இந்த படம் குறித்து இன்னும் என்னென்ன செய்திகள் வெளிவரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.