close
Choose your channels

திரைப்பட படப்பிடிப்பு குறித்து மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு: திரையுலகினர் குஷி!

Sunday, August 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. தற்போது நடைபெற்று வரும் 7ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைகள், கோவில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இருப்பினும் திரையரங்குகள் திறக்கவும், திரைப்பட படப்பிடிப்பு நடத்தவும் மட்டும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சற்று முன்பு திரைப்பட படப்பிடிப்புகளை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கப்படுவதாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக பிரகாஷ் ஜவதேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் எச்சில் துப்பக் கூடாது என்று மத்திய அரசு தனது வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.