close
Choose your channels

'இந்தியன் 2' வழக்கு: லைகாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்!

Thursday, June 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’இந்தியன் 2’ தயாரிப்பு நிறுவனம் லைகாவின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது ஷங்கரின் தரப்பு விளக்கத்தை கேட்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்க தடை விதிக்க உத்தரவிட முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதனை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்தது. அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ஹைதராபாத் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் இதே வழக்கை தொடர்ந்து உள்ளதாக புகார் கூறினார். மேலும் நிலையில் தனி நீதிபதி முன் நடந்து வரும் வழக்கை முடித்தபின்னர் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்து கொள்ளலாம் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளி வைக்கவும் அவர் கேட்டு கொண்டார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் லைகாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.