close
Choose your channels

மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Friday, April 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷுக்கு மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்துள்ள இந்த படத்தை அடுத்து மீண்டும் தனுஷ், மாரி செல்வராஜ் உடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தனுஷ் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ படத்தை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய உள்ளேன் என்றும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பமாகி விட்டன என்றும், அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து கலைப்புலி தாணு அவர்கள் ’அளவில்லா ஆனந்தம்’ என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் தற்போது துருவ்விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் தனுஷ் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.