close
Choose your channels

ரஜினி பட தலைப்பை தேர்வு செய்தது ஏன்? உதயநிதி பட இயக்குனர் விளக்கம்

Tuesday, January 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் ரிலீஸாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு ரஜினியின் பட தலைப்பான 'மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் 'மனிதன்' தலைப்பை தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்து இந்த படத்தை இயக்கி வரும் இயக்குனர் அஹ்மத் விளக்கம் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் நாயகன் வாழ்க்கையில் பல தவறுகள் செய்பவராக இருப்பதாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் திருந்தி நல்ல மனிதனாக மாறி விடுவதாகவும், எனவே இந்த படத்தின் கதைக்கு 'மனிதன்' என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என கருதியதால் 'ரஜினியின் 'மனிதன்' படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் முறைப்படி இந்த தலைப்பிற்கு அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதாகவும் அஹ்மத் கூறியுள்ளார்.

இந்தியில் சூப்பர் ஹிட் ஆகிய 'ஜாலி எல்.எல்.பி' என்ற படத்தின் ரீமேக்காக இருந்தாலும் இந்த படத்தின் திரைக்கதைக்காக தான் கடுமையாக உழைத்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தில் நீதிமன்ற காட்சிகள் உள்பட பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும், இன்னும் இரண்டு பாடல்களும் ஒருசில காட்சிகளும் மட்டுமே படமாக்க உள்ளதாகவும் அஹ்மத் மேலும் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், விவேக், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவும், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.