close
Choose your channels

இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணையும் சூர்யா

Wednesday, December 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாதவன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் 'இறுதிச்சுற்று'. ராஜ்குமார்ஹிரானி மற்றும் சசிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

வரும் ஜனவரி 4ஆம் தேதி 'இறுதிச்சுற்று' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவும் சூர்யாவும் கலந்து கொள்கின்றனர்., இந்த படத்தின் பாடலை இயக்குனர் பாலா வெளியிட, முதல் சிடியை நடிகர் சூர்யா பெற்றுக்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வருண்மணியன் கலந்து கொள்ளவிருக்கினறார்.


தமிழ், இந்தி என மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு 'கபாலி' மற்றும் விஜய் 60' படங்களுக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.