close
Choose your channels

ஊரடங்கால் வருமானம் இல்லை: மளிகைக்கடை ஆரம்பித்த தமிழ் திரைப்பட இயக்குனர்

Tuesday, June 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருவது தெரிந்ததே. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இன்றி பசியால் வாடுகின்றனர். குறிப்பாக திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் வருமானம் சுத்தமாக இல்லை

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வறுமையின் காரணமாக மளிகை கடை ஆரம்பித்து உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. திரையுலகிலிருந்து வருமானம் இல்லை என்பதற்காக அரசையும் சமூகத்தையும் குறை சொல்லாமல் வருமானத்திற்கு மாற்று வழியைத் தேடிய அந்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மௌன மழை’, ’ஒரு மழை நான்கு சாரல்’ மற்றும் ’துணிந்து செய்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆனந்த். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள ’நானும் பேய்தான்’ என்ற திரைப்படம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீஸ் ஆக தாமதம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு மேலாக வேலை இன்றி வருமானம் இன்றி இருந்த இயக்குனர் ஆனந்த் இனிமேலும் சும்மா இருக்க விரும்பாமல் உடனடியாக ஒரு மளிகைக் கடையை சென்னை அருகே உள்ள முகலிவாக்கம் என்ற பகுதியில் ஆரம்பித்துள்ளார். இந்த கடை மூலம் கிடைக்கும் வருமானத்தில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போவதாக அவர் தெரிவித்துள்ளார்

திரைஉலகம் மூன்று மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருப்பதால் ஏற்கனவே திரையுலகைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பல்வேறு தொழில்களை செய்யவும், பல வேலைக்கு செல்லவும் ஆரம்பித்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர் ஒருவரே மளிகை கடை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.