close
Choose your channels

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது சூர்யா பட இயக்குனரா? ஆச்சரியமான தகவல்!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை சூர்யா பட இயக்குனர் இயக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’அண்ணாத்த’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் திடீரென பெய்த கனமழை காரணமாக எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அதே நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்து கொடுக்க ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் மீண்டும் இணையும் இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ மற்றும் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய திரைப்படங்களை பாண்டிராஜ் இயக்கினார் என்பதும் இந்த படங்களை குறுகிய காலத்தில் சரியான பட்ஜெட்டில் இயக்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை கவர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பாண்டிராஜ் கூறிய கிராமத்து கதை ஒன்று ரஜினிகாந்த்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.