close
Choose your channels

'வடசென்னை' படத்தில் நீக்கப்படும் காட்சிகள்: வெற்றிமாறன் அறிவிப்பு

Monday, October 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக அபாரமான ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 'வடசென்னை' திரைப்படத்தில் ஆபாச வசனங்கள் அதிகம் இருப்பதாகவும் மீனவர் சமுகத்தை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியபோது, 'எங்களுடைய நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல என்றும், வடசென்னை படத்தில் மீனவர் சமூகத்தை புண்படுத்தும் காட்சிகள் மற்றும் ஆபாசமாக உள்ள வசனங்கள் இன்னும் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.