close
Choose your channels

காதலித்த பெண்ணை கைபிடித்த 'மூக்குத்தி அம்மன்' பட எடிட்டர்!

Sunday, November 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி எடிட்டர்களில் ஒருவரான செல்வா, ‘பரியேறும் பெருமாள்,  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல  முன்னணி படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில் எடிட்டர் செல்வா, சென்னையை சார்ந்த அனிதா என்பவரை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ள நிலையில் தற்போது அனிதாவை திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் எதையாவாது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காத்திருந்திருந்த செல்வா, எடிட்டர் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்ட நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் காதலி அனிதாவை திருமணம் செய்து கொண்டார். 

இந்த திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். லட்சியத்திற்காக பத்து வருடங்களுக்கு மேலாக காத்திருந்து கரம்பிடித்துக்கொண்ட தம்பதிகளுக்கு திரையுலகினர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.