close
Choose your channels

என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வர்: பழம்பெரும் நடிகை

Tuesday, December 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 'சென்னையில் திருவையாறு' என்ற நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்காக கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்த கன்னடத்து பைங்கிளியும் பழம்பெரும் நடிகையுமான சரோஜாதேவி கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:

'தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்'; என்று கூறினார். மேலும் நான் பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள் என்றும், அவர் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.