close
Choose your channels

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் மகன்: போலீசில் புகார் அளிக்காதது ஏன்?

Thursday, June 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் யாஷ்வரதன் அஹூஜா என்பவர் நேற்று மும்பையில் கார் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டதாக வெளிவந்த செய்தியால் பாலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் யாஷ்வரதன் நேற்று மும்பையில் இரவு நேரத்தில் தனது காரை தானே ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு கார் அவருடைய காருக்கு முன் வந்ததால் அந்த காரின் மீது யாஷ்வரதன் ஓட்டிச் சென்ற கார் மோதியது. இதனால் யாஷ்வரதன் தோளில் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் கவலைப்படும்படி எந்த காயமும் இல்லை என்று நடிகர் கோவிந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்து குறித்து தாங்கள் காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் ஏனெனில் தனது மகனின் கார் மீது மோதிய கார் டிரைவர் வருத்தம் தெரிவித்ததாகவும், அதுமட்டுமின்றி அந்த கார் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் நிறுவனத்திற்கு சொந்தமான கார் என்பதால் தாங்கள் புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் கோவிந்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் கோவிந்தாவின் மகன் கார் விபத்தில் சிக்கி உள்ள தகவல்கள் தற்போது வட இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos