close
Choose your channels

'இந்தியன் 2'விபத்து: ஷங்கருக்கு சம்மன் அனுப்பிய போலீசார்

Tuesday, March 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

கமல்ஹாசன் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை செய்து முடித்துள்ள நிலையில் தற்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த தனியார் பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நாளை ஆஜராக வேண்டும் என இயக்குனர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து நாளை இயக்குனர் சங்கர் அந்த பிலிம்சிட்டியில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விசாரணை இன்னும் சிறிது நேரத்தில் நடத்தப்படும் என கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos