close
Choose your channels

ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ள இந்திய தூதரின் தகவல்கள்

Tuesday, February 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு நேற்றே வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது உடல் வருகைக்காக இந்தியாவின் முன்னணி விஐபிக்கள் மும்பையில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் துபாய்க்கான இந்திய தூதர நவ்தீவ் சிங், ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்வது எப்போது என்பது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

துபாய் நாட்டின் சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.  அதே நேரத்தில் ஸ்ரீதேவியின் மறைவு குறித்த செய்தியில் ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.  இதனால் எவ்வளவு விரைவில் உடலை இந்தியா அனுப்ப முடியுமோ அவ்வளளவு விரைவில் அனுப்புவதற்கு துபாய் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் முயற்சி செய்து வருகிறது. ஸ்ரீதேவி குடும்பத்தினர் மற்றும் அவருடைய நலம் விரும்பிகளின் மனவேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுடன் எப்போதும் தொடர்பில் உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய தகவலால் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர இன்னும் காலதாமதம் ஆகும் என்பதால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 இந்த நிலையில் துபாய் போலீசார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூருடன் விசாரணை நடத்தி அறிக்கையாக தயார் செய்துள்ளதாகவும், விசாரணைக்கு பின்னர் போனிகபூர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.