close
Choose your channels

நல்லவேளை நான் வடசென்னை' படத்துல நடிக்கலை: விஜய்சேதுபதி

Monday, October 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் உள்பட அனைவரது நடிப்பும் பாராட்டப்பட்ட போதிலும் அமீர் நடித்த ராஜன் கேரக்டரை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

இந்த ராஜன் கேரக்டரில் முதலில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் ஒருசில காரணங்களால் விஜய்சேதுபதி திடீரென இந்த படத்தில் இருந்து விலகினார். ஒருவேளை விஜய்சேதுபதி இந்த கேரக்டரில் நடித்திருந்தால் இந்த படம் வேற லெவலில் இருந்திருக்கும் என விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, 'வடசென்னை' படத்தின் ராஜன் கேரக்டர் குறித்து கூறியபோது, 'ராஜன் கேரக்டரில் அமீர் நன்றாக நடித்திருந்தார். நல்லவேளை அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. இல்லையெனில் மூன்று வாரமும் தொடர்ந்து என்னோட படம் தான் ரிலீஸ் ஆகியிருக்கும் என நகைச்சுவையாக தெரிவித்தார். ஏற்கனவே அடுத்தடுத்த சில நாட்களில் விஜய்சேதுபதி நடித்த 'செக்க சிவந்த வானம்' மற்றும் '96' திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.