close
Choose your channels

மீடூ பிரச்சனை: மாறுபட்ட கருத்தை கூறிய ஜனனி-பாலாஜி

Monday, October 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மீடூ பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் போட்டியாளர்களான ஜனனி மீடூவுக்கு ஆதரவாகவும், பாலாஜி எதிர்ப்பாகவும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீடூ என்பது ஒரு நல்ல விஷயம். சினிமாத்துறையில் மட்டுமின்றி எல்லாத்துறையிலும் இந்த பிரச்சனை உள்ளது. சினிமாத்துறை என்பதால் இந்த விஷயம் தலைப்பு செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் தைரியமாக முன்வந்து இந்த பிரச்சனை குறித்து பேச வேண்டும். அப்போதுதான் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயம் வரும். அதேபோல் மீடூ பிரச்சனையை தவறாக யாரும் கையாள வேண்டாம். உண்மையிலேயே பிரச்சனை ஏற்பட்டிருந்தால் மட்டும் தெரிவிக்கவும் என்று ஜனனி கூறினார்.

அப்போது ஜனனி அருகில் இருந்த பாலாஜி இதுகுறித்து கூறியபோது, 'மீடூ என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் அவர்களே அவர்களை அசிங்கப்படுத்தி கொள்வது போன்று உள்ளது. பெண்களுக்கு குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு அவர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் அசிங்கப்படுத்தி கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை' என்று கூறியுள்ளார்.

மீடூ பிரச்சனை குறித்து ஜனனி, பாலாஜி இருவரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.