close
Choose your channels

முதல்முறையாக திமுகவுடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்!

Thursday, December 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்முறையாக திமுகவுடன் கைகோர்க்கும் கமல்ஹாசன்!

திமுகவுடன் மக்கள் நீதி மையம் கட்சி முதல் முதலாக கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியை திமுக டிசம்பர் 23-ஆம் தேதி அனைத்து கட்சிகளுடன் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் செய்ய இருப்பதாக அறிவித்தது

அப்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் இந்த போராட்டம் குறித்து கமல்ஹாசனுடன் தான் பேசி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள் ‘திமுகவின் போராட்டத்தில் கலந்துகொள்ள முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை கமலஹாசன் ஏற்றுக்கொண்டதாகவும் வரும் 23ஆம் தேதி நடைபெறும் திமுக தலைமையிலான போராட்டத்தில் கமல்ஹாசனும் அவரது கட்சியினர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. போராடத்தில் தொடங்கும் இந்த கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தல் வரை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.