close
Choose your channels

அபூர்வ சிங்கீதம் ஓர் இனிய தொடக்கம்.. கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான பதிவு..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கான விழா ஒன்றை கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் பல சுவாரஸ்ய அம்சங்களை கொண்டது என்பது இந்த விழாவுக்கு சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த நிலையில் இந்த விழா குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்றும் பொலிவு குன்றாமல் இருக்கும் மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ்.

அவரைக் கொண்டாடவும், கடந்த காலத்தின் இனிய தருணங்களை நினைவுகளில் மீட்டெடுக்கவும் ‘அபூர்வ சிங்கீதம்’ திரைப்பட விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்காக சிங்கீதம் சார் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ராஜ பார்வை, புஷ்பக் (பேசும் படம்), அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய 4 படங்களைத் தேர்ந்தெடுத்து திரையிட்டோம்.

திரையிடலுக்கு பின் இயக்குனருடன் நானும், படத்தில் பங்காற்றிய கலைஞர்களும் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இன்றைய தலைமுறை இயக்குனர்களும், கலைஞர்களும் உரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்றுக்கொண்டனர்.

இளமை மாறாத உற்சாகத்துடன் திகழ்ந்த சிங்கீதம் சார் தனது நெடிய திரைப்பட அனுபவங்களையும், தரமான சினிமாக்கள் மீதான தனது பார்வையையும் அள்ளக்குறையாத அனுபவச்செறிவுடன் அளித்தார்.

அபூர்வ சிங்கீதம் ஓர் இனிய தொடக்கம். நன்மை மலரட்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.