close
Choose your channels

திருமணம் செய்யாமலேயே செட்டில் ஆகிவிட்டேன்: ஷங்கர் பட நாயகி பேட்டி!

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணம் செய்து எப்போது செட்டில் ஆவீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு திருமணம் செய்யாமலேயே நான் செட்டில் ஆகிவிட்டேன் என்று ஷங்கர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் தேஜா நடித்து வரும் ’ஆர்.சி. 15’ திரைப்படத்தில் நாயகியாக நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இவர் நடித்த பாலிவுட் திரைப்படமான ’ஜக்ஜக் ஜீயோ’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர் .

அப்போது ’திருமணமாகி எப்போது செட்டில் ஆவீர்கள்’ என்று கேட்டபோது ’நான் திருமணம் ஆகாமலேயே செட்டிலாகி விட்டேன் என்றும் நல்ல வேலை செய்து வருகிறேன், நன்றாக சம்பாதித்து சம்பாதித்து வருகிறேன், தற்போது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டேன்’ என்று பதிலளித்தார்.

இந்த நிலையில் நடிகை கியாரா அத்வானி கடந்த சில ஆண்டுகளாக பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் லிவிங் டுகெதராக வாழ்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.