close
Choose your channels

என் மனைவி வேலைக்கு சென்றதால் தான் சினிமாவில் ஜெயித்தேன்: லோகேஷ் கனகராஜ்

Tuesday, February 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என் மனைவி வேலைக்கு சென்று குடும்பத்தில் சப்போர்ட்டாக இருந்ததால் தான் என்னால் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்று பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன் பின் ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் தற்போது அவர் விஜய் நடித்துவரும் ’லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இன்றைய நிலையில் கோடிக்கணக்கில் லோகேஷ் கனகராஜ் சம்பளம் வாங்கிய போதிலும் சினிமாவில் அவர் நுழைவதற்கு மிகவும் சிரமப்பட்டார். சினிமா ஆசை காரணமாக வேலையை விட்டுவிட்ட லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம்’ வெற்றி பெற்ற போதிலும் இரண்டாவது படம் கிடைக்கும் வரை தனது மனைவியை வேலைக்கு அனுப்பியதாகவும் மனைவியின் சப்போர்ட் இருந்ததால் தான் என்னால் சினிமாவில் ஜெயிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஐஸ்வர்யா என்பவரை லோகேஷ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அத்விகா லோகேஷ் மற்றும் ஆருத்ரா லோகேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சினிமாவில் வருவதற்கு முன் லோகேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து 70 ஆயிரம் சம்பாதித்ததாகவும் அதன் பின் சினிமாவுக்காக நான் வேலையை விட்டு விட்டாலும் என் மனைவி தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார் என்றும் கூறினார். குழந்தை ஏழு மாதமாக இருக்கும்போது என்னுடைய மனைவி வங்கியில் பணியில் சேர்ந்து எங்கள் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக இருந்தார் என்றும் நான் இரண்டாவது படம் கையெழுத்தான பின்னர் தான் அவரை வேலையை விட்டுவிடச் சொன்னேன் என்றும் இந்த புரிதல் தான் என்னை சினிமாவில் நிலை நிறுத்தியது என்றும் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.