close
Choose your channels

விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது: கே.வி.ஆனந்த் மறைவு குறித்து வைரமுத்து!

Friday, April 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விவேக் மற்றும் தாமிரா ஆகியோர் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரை உலகுக்கு பேரிழப்பு தான் என்று கூற வேண்டும்

இந்த நிலையில் இயக்குநர் கேவி ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது

வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

வருந்துகிறேன் நண்பா!

திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!

வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!

என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!

இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?

விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!

ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.

இதேபோல் இயக்குனர் பாரதிராஜா, கே.வி.ஆனந்த் மறைவு குறித்து கூறியதாவது: இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், தமிழனுக்கு பெருமைச் சேர்த்த பேரன்பு கொண்ட KV ஆனந்த் உன் மறைவு நம்பமுடியவில்லை, அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், திரையுலகத்துக்கும், ஆழ்ந்த இரங்கல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.