close
Choose your channels

வரவேற்கத்தக்க மாற்றம்: 'கைதி'க்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்

Saturday, November 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமா என்றால் அதில் ஹீரோ, ஹீரோயின், பாடல்கள், காமெட மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதுதான் கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு பார்முலா. இந்த ஃபார்முலாவைத்தான் பிரபல இயக்குனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அந்த பார்முலாவை உடைத்து ஹீரோயின் இல்லாமல், பாடல்கள் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன், ஒரே இரவில் நடக்கும் ஆக்சன் கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘கைதி’

இந்த திரைப்படம் ‘பிகில்’ என்ற பிரமாண்டமான படத்துடன் வெளிவந்த போதிலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விமர்சனங்கள் கொடுத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படத்திற்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன இந்த நிலையில் ’கைதி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’கைதி’ படத்தை பார்த்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்

கைதி திரைப்படம் வித்தியாசமான புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றும் திரில்லிங் காட்சிகள் அசத்தலாக இருப்பதாகவும், இதன் திரைக்கதை மிகவும் அருமையாக இருப்பதாகவும் , பாடல்களை இல்லாமல் படங்கள் உருவாகுவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என்றும், இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மகேஷ்பாபு இந்த பாராட்டுக்கு ‘கைதி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.