close
Choose your channels

போலீஸ் விசாரணைக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் பிரபல நடிகை

Saturday, July 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விறுவிறுப்பாக நடத்தி கொண்டிருக்கும் நிலையில், இதே விறுவிறுப்புடன் தெலுங்கிலும் ஜூனியர் என்.டி.ஆர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் சில தெலுங்கு நட்சத்திரங்கள் போதை மருந்து விற்பனையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இவர்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் கவர்ச்சி நடிகை முமைத்கானும் ஒருவர். முமைத்கான் ஜூலை 27ஆம் தேதி போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜூலை 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதற்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து முமைத்கான் வெளியேற பிக்பாஸ் அனுமதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலிசார் தரப்பில் கூறியபோது, பிக்பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் நாங்கள் பேசிவிட்டோம். முமைத்கான் குறிப்பிட்ட நாளில் விசாரணைக்கு வருவார் என்று அவர்கள் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைக்கு பின்னர் முமைத்கான் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.