close
Choose your channels

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பிரபல சீரியல் நடிகர் கைது!

Saturday, June 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகப் பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் பேர்ல் வி புரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். இவருடன் சேர்த்து அவரது நண்பர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் “நாகின்“ எனும் சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஹிட்டானதை அதன் 2, 3, 4, 5 எனத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் ஒளிப்பரப்பட்டு வருகின்றன. தமிழிலும் இந்த சீரியல் “நாகினி” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. இதன் 3 ஆவது பாகத்தில் கதாநாயகனாக நடித்தவர்தான் பேர்ல் வி புரி. இவர் நாகின் சீரியல் தவிர பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

இவர் மீது 17 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். சினிமா வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்தச் சிறுமி தெரிவித்து உள்ளார். இந்தப் புகாரை அடுத்து பேர்ல் வி புரியை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்றிரவு கைது செய்துள்ளனர். இவருடன் சேர்த்து இவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.