close
Choose your channels

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்: ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி!

Sunday, October 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’ஒரு கிடாயின் கருணை மனு’. விதார்த் மற்றும் ரவீனா ரவி முக்கிய கேரக்டரில் நடித்து இருந்த இந்த படத்திற்கு ரகுராம் என்பவர் இசையமைத்திருந்தார். இவர் நேற்று காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 38.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக இசையமைப்பாளர் ரகுராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி திடீரென காலமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தில் ரகுராம் மூன்று பாடல்களை கம்போஸ் செய்து இருந்தார் என்பதும் மூன்று பாடல்கள் ஹிட்டான பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 38 வயதில் காலமான மறைந்த இசையமைப்பாளர் ரகுராம் அவர்களின் மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.